Wednesday, January 13, 2016



300 Beautiful photographs in my book “Diary on the nesting behavior of   Indian Birds” Buy from amazon.in thro’ on line.

நல்லதொரு நிழற்படம்

            காலை அல்லது மாலை வேளையில் நல்ல நிழற்படம் அமைய நிறைய வாய்ப்பு. நிழற்படக்கலைஞன் ஒரு ஓவியன். இப்படியும் சொல்லலாமே! நல்லதொரு கவிஞன். கவிதை வடிப்பதும், ஓவியம் வரைவதும் எனக்குப்பிடித்தமானது. உங்களுக்கு? இதோ! நிழற்படத்தில் ஒரு  எளிமையான கவிதை. இதோ! ஒரு அழகான ஓவியம். இதை எழுத எந்த ஒரு முயற்சியும் இல்லை. எந்தத் திட்டமும் இல்லை. ஒரு அழகிய கிராமம். மாலை வேளை சூரிய கிரணங்கள் மேற்கிருந்து கிழக்காக வருகின்றன. நங்கை அரசமரத்துப்பிள்ளையாரை வணங்கிவிட்டு மேற்கத்திய கிரணங்களை நோக்கி நடக்கிறாள். இரண்டு மரங்கள் மாலை மஞ்சள் கிரணங்கள் பச்சை, அடர் பச்சை, வெளிர் பச்சை வெளிப்படுத்துகின்றன. இடுப்பில் இருக்கும் சிகப்பு குடத்தில் கூட வெளிச்சகிரணங்கள் ஊடுருவி நிற்கும் அழகு. கையில் பூக்கூடை. இடது புறம் கிராமத்துக்குரிய சிமெண்ட் தொட்டி. எதிரே மற்றுமொரு இறை சந்நதி. அதன் சுவர்கள் கோயில் கோபி நிறம், குட மங்கை பச்சை சேலை, மரங்களின் பரந்த தண்டுகள், அதன் மஞ்சள் இலைகள் என மாலைக்கதிரவன் தன் கிரணங்களால் ஓவியம் வரைந்தது உண்மை. வெளிச்சமும், நிழலும் கைகோர்த்த அருமைக்காட்சியிது.  கவிஞனுக்கு இது சுவையான கவிதை. ஓவியனுக்கு இது அழகான ஓவியம். கிராமத்து காட்சிகள் எளிமையின் அழகை சொல்லாமல் சொல்லும். மனம் சலனமற்ற நிஷ்சலமான கணங்கள் இவை. இது மாதிரி படைப்புகள் எதிர் பாராமல் கிடைக்கும். பார்த்து ரசித்து, கவிதை எழுதுங்கள். இல்லையெனில் ஓவியம் தீட்டுங்கள், நண்பர்களே!

No comments:

Post a Comment