Tuesday, November 3, 2015

என்னெதிரே ஒற்றை இருக்கையில்..............

































என்னெதிரே ஒற்றை இருக்கையில்
நான் இசைத்த பாடலைப் பாடும் உனக்கு,
உயிரை உறிஞ்சும் குரல் வளமை;
விரல் நயனங்களும், புருவ ஏற்ற இறக்கமும்
உதட்டுச்சுழிவும், கண்களின் உயிர்ப்பும்
பாடும் பாவமும், சொல்லாமல் சொல்லும்
உனது ரசிப்பை; அபரிமித ரசனையை;
எனது இசைக்கு மேலும் உயிர்ப்பானாய்
தென்னம் பாளையென பற்களின் ஒளிர்வும்
ஓ! நாக்கில் ஊறிவரும் எனது பாடலும்
என்னவென்று சொல்வேன்! தோழி!
இதுவே நமது கடைசி சந்திப்பா?
இந்த உடலான இசைக்கு
உன் உயிர் கலந்த குரல் உயிர்ப்பூட்டும்
தேனும், கற்கண்டும் கலந்த கலவை-இது
தெவிட்ட ஞாயமில்லை! தோழி!
மேலும் சந்திபோம் என்பதில்லாத போது
இந்த இனிமையான பாடல் ரீங்காரமிடும்
என்னைச்சுற்றிஉன் நினைவுகளைப்போல…………….சின்ன சாத்தன்


No comments:

Post a Comment