Friday, May 1, 2015


என்னை வியப்பில் ஆழ்த்தும் பறவைகள்


Coppersmith Barbet ready to carry refuses of Chicks in its' beak

Purple Moorhen hurriedly swimming due to parisal.

          நீலக்கோழி(Purple Moorhen) நீந்துமா நீந்தாதா என பல வருஷங்கள் என்னை நானே கேட்டுக்கொண்ட கேள்வி. பால்பாண்டியிடம் கேட்ட போது, “அது நிர்பந்தம் வந்தால் நீந்தி அடுத்த திட்டுக்குப்போகும்என்றார். அது நீந்தும் அழகைப்பார்க்க எனக்கு வெகு நாள் ஆவா. பரிமாணம் பெரியது. நீந்தினால் அழகாக இருக்கும். அதன் நிறம் நீலம் ஒரு வித்தியாசமான நிறம். பல காத்திருப்புக்குப்பின் அது நிர்பந்தத்தில் நீந்தும் அழகைப்பார்த்து ரசித்தேன். ஆபத்து என வரும் போது மேலும் ஒரு திட்டுக்குப்போக நினைக்கும் போது நீலக்கோழி நீந்தும். இதை விட இது மூழ்கி சிறிது தூரம் நீந்திப் போய், நீர்காகம் மாதிரி நீர்மட்டத்தில் எழுமா? என நான் பால் பாண்டியைக்கேட்கவில்லை. அது எனக்குத்தோன்றவில்லை.
   ஒரு நாள் பறவை நோக்கலில் ஈடுபட்டிருக்கும் போது, பரிசல்காரன் பரிசலில் மீன் பிடிக்கக் கிளம்பினான். அப்போடு குறுக்கே வந்து விட்ட நீலக்கோழி பரிசலுக்கு தப்பிக்க நீரில் மூழ்கி சிறிது தூரம் சென்று பின் நீர் மட்டத்தில் எழுந்து நீந்திப்போனது. நான் ஒரு நிமிஷம் ஆடிப்போய் விட்டேன். நீலக்கோழி மூழ்கி இறந்து விட்டதா என ஐயம் எழ சில வினாடிகளில் நீர் மட்டத்தில் தலை தெரிய நிம்மதி அடைந்தேன். அது அருகில் உள்ள ஆகாசத்தாமரைபரப்புக்குச்சென்றது. ஆபத்து என்றால் நீரில் மூழ்கி நீந்தி, எழுந்து மீண்டும் நீந்துகிறது.
பல விஷயங்கள் அதாவது பறவைகளின் குணாதிசயங்கள் இன்னும் பதிவு செய்யக்கூடியவை நிறைய உள்ளன. Dr. சலீம் அலி நூலில் பதிவு செய்யப்படாததை நான் பதிவு செய்கிறேன். எனக்கு அரசு அல்லது மற்ற அமைப்புகள் நூல் வெளியிட உதவுவதும் இல்லை. அப்படி நான் வெளியிட்டாலும் அதை பள்ளி, கல்லூரிகள் வாங்கத்தயக்கம் காட்டுகின்றனர். அரசு நூலகங்களில் தேர்வு செய்வதில் ஊழல் வேறு
      குக்குறுவான்(CoppersmithBarbet) மரஓட்டைகூட்டில்முட்டையிட்டுக்குஞ்சுபொரித்தாலும், அடிக்கடி அந்தமரக்கூட்டில் வந்து, தலையை வெளியில் தொங்கவிட்டவாறு ஓய்வெடுக்கிறது. கூட்டை சுத்தம் செய்யாது என பால்பாண்டி சொன்னது தவறானது. குக்குறுவான் சுத்தம் செய்கிறது. சுத்தம் செய்யாவிடில் இரு குஞ்சுகள் தங்க இடமில்லாதுபோகும். குஞ்சுகளின் கழிவுகளை அலகில் சுமந்து கொண்டு சற்று தூரம் பறந்து நழுவ விடுகிறது.


எனது நூலில் “Diary on the nesting behavior of Indian Birds”இவைகளை சேர்க்க வேண்டும். அடுத்த பதிப்பு வந்தால் சேர்ப்பேன். முதல் பதிப்பை விற்கவே வழியில்லை. மக்கள் வாசிப்பது குறைந்து, அலைபேசிக்கு அடிமையாகி விட்டனர். ரயிலில் பாதிப்பேர் காதுகளில் ஒயர் தொங்குகிறது. மீதிப்பேர் ஐப்பேட், லேப்டாப் சகிதம். மக்கள் செவிப்புலனையும், கண்பார்வையையும் தாறுமாறாக உபயோகித்தல் தீங்கை விளைவிக்கப்போவது உறுதி. யாராவது கையில் புத்தகம் இருக்கிறதா? நூல்கள் வாசிக்காதவன் அரைமனிதன். அவன் வாசிப்பு சுகத்தை இழந்தவன். யாருக்கும் எதையும் சொல்ல முடியுமா அவனால்?

No comments:

Post a Comment