Tuesday, January 13, 2015


காதலியே……….
வண்ணத்துப்பூச்சி இறகைப் பரிசளிக்கலாம்
ஆயின் இறகு உதிர்த்தால் மட்டுமே…..
மயில் கழுத்து நிறப்பொட்டு வைக்கலாம்
ஆயின் அது கனவில் மட்டுமே……
வானவில் சேலை நெய்து தரலாம்
ஆயின் அது சாத்தியமா……
நீலோற்பல மலர் விழிகள் ஆக்கலாம்
ஆயின் அது கை கூடுமா…..
கொவ்வைக் கனி உதடு கொடுக்கலாம்
ஆயின் அது நிறைவேறுமா….
வஞ்சிக்கொடி இடை வைக்கலாம்
ஆயின் அது சந்தேகமே…….
தாமரை மொட்டில் கொங்கை உருவாக்கலாம்
ஆயின் அது முடியுமா……..
காயாம்பூ போன்று கூந்தலை வளர்க்கலாம்
ஆயின் அது மெய்ப்படுமா….
முத்துப் போன்று பற்களை கோர்க்கலாம்
ஆயின் அது இணையுமா……
பிறைநிலா நெற்றி செய்யலாம்
                                                                   ஆயின் அது மெய்யா…….
                                                                   பாம்பின் படம் போல அல்குல் அளிக்கலாம்
                                                                   ஆயின் அது உண்மையா…..
                                                                   முழு மதியென வதனம் பூசலாம்
                                                                   ஆயின் இதுவெல்லாம் கவிதையில் மட்டுமே
                                                                   சாத்தியம் காதலியே…….

No comments:

Post a Comment