Thursday, December 11, 2014


ஜெய்சால்மிர்


  


                       

பயணங்கள் ஆன்மாவைப்பக்குவப்படுத்தும் 

        நாங்கள் ராஜஸ்தான் பிரயாணத்திட்டம் தயாரிக்கும் போது ஜெய்சால்மிர் போக நினைக்கவில்லை. ஆனால் பிகானிர் சுற்றி வரும் போது வழிகாட்டி சன்சய் கண்டிப்பாக ஜெய்சால்மிர் போக வேண்டும். இவ்வளவு தூரம் வந்த பிறகு நீங்கள் தார் பாலைவனம் போகாமல் போனால் உங்கள் உலா முற்றுப்பெறாது என வற்புறுத்தவும், எனக்கும் அங்கு செல்ல ஆசை இருந்துகொண்டே இருந்ததும் காரணமாக எங்கள் உலாவை மாற்றி அமைத்தோம். காலை 7.20-மணிக்கு லால்கர் ஃபோர்ட்டிலிருந்து ரயில். குளிரில் கம்பளியோடு சுறுட்டிக்கொண்டு எழுந்து . வெடவெடக்க ஆட்டோவில் கனத்த பைகளோடு 05.45-க்கு ஏறி, 5 கி.மீ பிரயாணித்தோம். ரயில் பாலைவனத்துக்குள் பிரயாணித்தது, எனக்கு வாழ்நாளில் புதுமையாக இருந்தது. பாலையில் கூட பறவைகள், சில விளைச்சல்கள், மேயும் ஒட்டகங்கள் என பிரயாணத்தை அனுபவித்தேன். போகும் வழியில் கஜ்னர், மான்கள் சரணாலயம் வந்தது. அது ஒரு அடர்த்தியான முட்காடு.
     ஜெய்சால்மிரில் இறங்கினோமோ இல்லையோ எங்களைச்சுற்றி தங்கும் விடுதிக்காரர்கள் சூழ்ந்து கொண்டு இழுத்தார்கள். அலாவுதீன், சாம்ராட் விடுதி முதலாளி ஜுப்பில், பிரயாணித்து மதியவேளையில் 1.30-க்கு விடுதியை அடைந்து குளித்து, உணவு வேளை தவறியும் உண்டோம். இளைஞர்,மண்டூ என்ற ஓட்டுனருடன் மணல் குவியல்களுக்குப்பறந்தோம். கோட்டைகள் தற்போது டிக்கெட்டில் காட்சிப்பொருளானதுஅல்லது அது ஓட்டலாகிப்போனது. எத்தனை அழகான கோட்டைகள்! ஒளிரும் விளக்குகளில் ஒளிர்ந்து மயக்கின. அவற்றில் தங்கக்கூடிய அளவு நான் செல்வந்தனில்லையே என ஆதங்கம் மிகுந்தது. பாகிஸ்தான், அங்கிருந்து 60 கி.மீ தூரத்திலிருந்தது. 40 கி.மீ ஜிப்பில் பிரயாணித்து தார் மணல் குன்றுகளை அடைந்தோம். மாலை சூரியன் அஸ்தமனமாவதற்குள் தார் பாலைக்குள் நுழைந்து விடவேண்டும் என பரபரப்பு எனக்கு. ஆனால் நண்பர் இங்கு வந்து ஒரு ஜெயின் கோயிலிற்குள் நேரத்தை செலவழித்தது, டென்ஷன் கொடுத்தது. நான் பாக்யவான். சரியாக சூரிய அஸ்தமனமாகும் போது  தார் பாலைக்குள் ஒட்டக முதுகில் சவாரியில் இருந்தேன். கடவுளே! மணல் குன்றுகள் அட!அட! என்னென்ன வடிவங்கள்! தாழ்ந்தும், ஏறியும் ஒரு அழகிய பெண்படுத்திருந்ததைப் போல…… ..…….
             ஆரஞ்சு சூரியப்பந்து ஒட்டக முதுகில் விழுந்து மறைய எத்தனித்தது. என்னை நோக்கி வந்த இளம் பெண்கள் ராஜஸ்தான் அடர் நிறம் மற்றும் அணிகலன்களில் ஒப்பனையோடு இருந்தனர். என்முன் பாட்டுப்பாடியவாறு ஆடினர். ஒளிப்படமாக என் காமெராவுக்குள் சென்றனர். ..ஒ....... இவர்களுக்கு இந்த மணல்வெளிதான் சொற்பமான காசு கொடுக்கும் பூமி. Silhouette ராஜஸ்தான் இளம் பெண்களின் நடன அசைவுகள், முற்றுமான பாலைக்குன்றுகளில் சிகப்பு ஆதவனில் மறைய எத்தனிக்கும் தருணம், ஒட்டகங்கள் என்னை வேடிக்கை பார்க்க….என் வாழ்நாளில் எஞ்சிய நாட்களில் இதுவும் என்னுள்ளே எஞ்சி நிற்கும் நண்பரேநான் பாக்யவனாகிப்போனேன்.


No comments:

Post a Comment