Friday, March 14, 2014


பருவ காலங்கள்




Pink poui (Tabebuia rosea)

பருவ காலங்கள்

தமிழ் மண்ணில் பருவ காலங்கள் ஆறு. கார் காலம், கூதிர் காலம், முன் பனிக்காலம், பின் பனிக்காலம், இளவேனிற் காலம், மற்றும் முதுவேனிற் காலம். ஆனால் மேற்கத்திய நாடுகளில் நான்கு பருவ காலங்கள். வசந்த காலம்(Spring), வேனிற் காலம்(Summer), குளிர் காலம்(Winter) மற்றும் இலையுதிர் காலம்(Autumn). மேற்கத்தியருக்கு மூன்று, மூன்று மாதங்களாகப் பருவ காலம். நமக்கு இரண்டு, இரண்டு மாதங்களாக பருவ காலம். கார்த்திகை, மார்கழி பின் பனிக்காலம். பங்குனி, சித்திரை முதுவேனிற் காலம், தை, மாசி இளவேனிற் காலம், புரட்டாசி, ஐப்பசி முன் பனிக்காலம், வைகாசி, ஆனி கார் காலம், ஆடி, ஆவணி கூதிர் காலம்.
உலக வெப்பமயமாதலில் நமது நாட்டில் பருவ காலங்கள் வெகுவாக மாறி விட்டன. ‘ஆடிப்பட்டம் தேடி விதைவைகாசி, ஆனியில் தென்மேற்குப்பருவ மழை அடை மழையாக இருக்கும். மழை விட்டதும் ஆனியில் விதைப்பார்கள். ஆடி, ஆவணி குளிர் காலம். மழை பெய்ததில் குளம், குட்டை நிறைந்திருக்கும், பூமி குளிர்ந்திருக்கும். ஆடிக்காற்று வீச கூதிர் எனும் குளிரில் சாளரம் திறக்கவிடாது. குளிர் காற்றில் நடுங்கிப்போய் தீமூட்டி குளிர் காய்வர். கார்த்திகை தீபம் வரிசையாக வீடு தோறும் ஏற்றும் போது அத்தோடு பனிக்காலம் முடிகிறது. சித்திரையில் கொழுத்தும் வெய்யில் முடிய முடிய இடி மின்னலுடன் மழை. ஐப்பசியில் வடகிழக்கு பருவ மழை. சார மழை, கொங்க மழை, அடை மழை, எனப்பெயர் வைத்து அழைத்த மழைகள் எங்கே? மக்கள் தொகை, வாகனப்பெருக்கம், காடு அழிப்பு, மாந்தரின் பேராசைக்கு ஈடு கொடுக்க முடியாமல் சிதையும் இயற்கை, இதுவெல்லாம் பருவ காலங்களை பாதித்து விட்டன.
வெப்பம், அதிவெப்பம், மிக அதிவெப்பம், அக்னிவெப்பம் என்று, தானே பருவ காலங்களை மனிதன் மாற்றி விட்டு, குளிர் சாதனப்பெட்டி வைத்து உட்கார்ந்து விட்டான். இந்த அவல நிலை மாற அடர்ந்த காடுகளை உருவாக்கவேண்டும். மலைகளில் ஊர் சமைத்ததை கைவிட்டு சமதளம் வந்து குடியேற வேண்டும். மீண்டும் மலைகளில் காடுகள் உருவாக்கினால் பருவ காலங்களை மீட்டு எடுக்கலாம். இல்லையெனில் வரும் காலங்களில் பருவ காலத்தை நாம் கணிக்க முடியாது திணருவோம்.
இப்போது இந்த மாசி மாதம் இளவேணிற்காலம். இது நமக்கு பனி முடிந்து கதிரவன் இதமான வெப்பம் தரும் பருவம். இலைகள் உதிர்ந்து, மலர்கள் வர்ஷிக்கத் தொடங்கி விட்டன.

மரங்களைப்போற்றுவோம்

No comments:

Post a Comment